search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி நிதின் கட்காரி"

    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    சென்னை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற பிரபல செய்தி நிறுவனத்தின் தொழிற்சங்க நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்று பேசினார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்ற 4.60 லட்சம் சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்ட கட்காரி, நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டியதை உறுதிப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

    அதே வேளையில் நெடுஞ்சாலை விவகாரத்தில் நல்ல தரமான சேவைகள் தொடர வேண்டுமென்றால், சுங்க வரிகளை செலுத்தியே தீர வேண்டும். நெடுஞ்சாலை சுங்க வரியை ரத்து செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Gadkari #highwaytoll
    ×